Sunday, July 1, 2012

பசுமை புரட்சி:

மனிதம் என்னும் குழந்தையை
முறை தவறியே வளர்த்துவிட்டோம் நாம்.
இன்று வளர்ந்து ஓர் களையாகவே
மாறிவிட்டது இப்பூவுலகில்.
களையெடுக்க வழி இல்லை இனி,
கழற்றி எடுக்கவே முடியும்.

பசுமை புரட்சி வேண்டாம் இனி எங்களுக்கு,
மனிதப்புரட்சியே வேண்டும்.
======================================

Wednesday, November 30, 2011

தமிழின் இன்றைய நிலை...

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி தமிழ்குடி. அத்தகைய பழமையான மொழி தமிழ். ஆனால், இன்று எத்தனை தமிழர்களுக்கு தூய்மையான தமிழ் தெரியும். நிச்சயமாக சொல்ல முடியும், ஒருவரை கூட காணமுடியாது.. இன்றைய இயந்திர உலகில், தமிழும் தமிழ் போன்ற பல பழமையான அற்புதங்களும் மறுக்கப்படுகின்றன, மறைக்கப்படுகின்றன, தவிர்க்கப்படுகின்றன.. இன்றைய நம்முடைய வாழ்க்கையில், இதை உணர்வதற்கும், காரணத்தை அறிவதற்கும் கூட நேரமில்லாமல், வாழ்கின்றோம். உலகில் உள்ள பல பிரபலமான மொழிகளில், மிகவும் வேகமாய் அழிந்து வரும் மொழி தமிழ்.. அது எவ்வாறு என்பதை இக்கட்டுரையில் அலசுவோம்..

அதிகமாக பின்னோக்கி செல்லவேண்டாம். இருபதாம் நூற்றாண்டில் மட்டும் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்தல் போதும். தாய்மொழியாம் தமிழையும் தமிழனின் வாழ்க்கையையும் மறக்கிறோம் என்பது புரியும். திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும், தெளிவுரை படித்தால் மட்டுமே அரைகுறையாக புரிந்தது நமக்கு. இன்று பல குழந்தைகள் அவற்றை தெளிவுரை வைத்து கூட படிப்பதே இல்லை.. இலக்கண தமிழில் நொடிப்பழுதில் கவிதை செய்த காலம் மாறி, இருபதாம் நூற்றாண்டில், நடைமுறை தமிழில் கவிதைகள்.. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அதுவும் மறக்கப்பட்டு, தமிழ் புது முகம் கொண்டது. தமிழ் இலக்கண இலக்கியங்களை மறந்து, வண்ணத்திரை பாடல்களை படைத்தோம். இன்றைய நிலைமை, தமிழ் இல்லாமல் ஆங்கிலத்தில் இயற்ற்றப்படும் பாடல்கள்தான் மக்கள் மனதை கவர்கின்றன. இதிலிருந்து தமிழ் எத்தனை வேகமாக மாறுகிறது, மறைகிறது என்பதை அறியலாம். அத்துடன் சேர்ந்து தமிழனின் கலாச்சாரமும் சேர்ந்து மறைந்துவருகிறது.. நாம் பார்த்தவற்றை வைத்தே பேசுவோம். நம் தந்தை அல்லது அவரின் தந்தை, இவர்களில் ஒருவராவது, தான் பிறந்து வளர்த்த மண்ணை பிரிய மறுத்திருப்பார். ஆனால், இன்று தன் மகனோ மகளோ, வெளிநாட்டில் இருக்க பிரியப்படும் தாய் தந்தையர் எத்தனை பேர். அப்படி என்ன தவறிழைத்து விட்டோம் நாம், நம் தாய் நாட்டை விட்டு விரட்டியாடிக்கபடுவதற்கு? காரணம் அதுவாக இருக்க முடியாது. நமது பெற்றோர்கள் சந்தித்த பிரச்சனைகளே காரணமாக இருக்க முடியும். தெரிந்தோ தெரியாமலோ, தாய்நாட்டில் வாழ வழி இல்லை என்று நினைத்துவிட்டோம். இன்று தன் தாய் மடியை விட்டு அடுத்த வீட்டு தாயின் காலில் கிடக்கிறோம்.. அதை நினைத்து பெருமையும் பட்டுக்கொள்கிறோம். இதெற்கெல்லாம் மூல காரணம் நம் அறியாமையா? தமிழின் இயலாமையா? அல்லது தமிழனின் கோழைத்தனமா? தமிழனின் வீர வரலாற்றினை, நாம் அனைவரும் வாய்விட்டு படித்திருப்போம். அதனாலோ என்னவோ எவருக்கும் மனதில் இல்லாமல் போய்விட்டது.. சங்கம் வைத்து ஒரு மொழியை வளர்த்த சமூகம். இன்று எத்தனை சங்கங்கள் உள்ளன, ஓரிரண்டு இருந்தாலும், நம் மொழிக்காக எத்தனை உள்ளன? ஒரு நாட்டில் என்ன வளர வேண்டும் என்ன வளர கூடாது என்பதை கட்டுப்படுத்தும் தொலைநோக்கு பார்வை, அரசிடம் இருக்க வேண்டும், மக்களிடமும் இருக்க வேண்டும். ஆனால், இன்று நமக்கும் தெரியவில்லை, தெரிந்தாலும் அரசாங்கமும் முயற்சிப்பதில்லை. நாம் எங்கு வாழ்ந்தாலும், அந்நாட்டு மக்கள், அவர்களின் பாரம்பரியம் மாறாமல் வாழ்வதை பார்க்கிறோம். அனால், நாம் மட்டும் அதை நினைத்துகூட பார்ப்பதில்லை. இவை எல்லாம் செல்வம் சேர்பதற்காக மட்டுமா? நம் நாட்டில் சம்பாதிக்க வழியே இல்லையா? அல்ல, நாம் தேடுவதில்லையா? இனி வரும் தமிழர்களில் எவராவது உணர்ந்தால், அன்று தோன்றி எடுப்பதற்கு கூட ஒரு தமிழ் எழுத்தும் இருக்காது..

Wednesday, September 2, 2009

நான்...

எழுதப்படாத காகிதமும், மைதீராத பேனாவும் போதும் எனக்கு,
இயன்றவரை எழுப்புவேன் இதயங்களை.

வேண்டாம் எனக்கு...

எழுதட்டும், எழுதட்டும்,
எழுதியே தீர்க்கட்டும் என் பேனா..
என் எழுத்துக்களால் இம்மண்ணில்
மீண்டும் மனிதம் தவழுமேயனால்.

பேனா மையும் பேப்பரும்
தீர்ந்தால் என்ன,
கடலின் நீலத்தை மையாக்கி,
மேகங்களில் எழுதி தீர்ப்பேன் நான்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல்
அழித்திடு இந்த ஜகத்தினை என்றான் பாரதி.
மனிதனுக்கும் மனிதத்துக்கும் இல்லாத
இவ்வானமும் கடலும் வேண்டாம் எனக்கு.
=======================================================

Monday, August 31, 2009

கண்ணீருடன் ஒரு கனவு...

மனிதம் மண்ணோடே போகட்டும்,
மனிதரெல்லாம் மிருகங்களாகவே வாழட்டும்.
இனி வேண்டாம் ஒரு வேற்றுமையும்,
மிருகங்களுக்கும் நமக்கும்.

டார்வினின் வாழ்க்கைத் தத்துவத்தின்படி,
மனிதர்கள் மனிதர்களாலேயே தின்னப்படுகிறார்கள்
இங்கு.
கனவுகள் கொள்ள வேண்டாம், மற்றவர்
கண்ணீரையும் துடைக்க வேண்டாம்.
சுயநலமும், சூழ்ச்சியும்,
தழைதொங்கட்டும் இவ்வுலகில்...

இவைகளினால் இன்றைய மானிடம்
முழுதும் அழிந்தவுடன்,
ஒரு விடியலில் தோன்றும், பனி தாங்கிய,
சின்னஞ்சிறு செடிதனைப் போல,
ஒரு புது உலகம் தோன்றட்டும்.

அன்றைய உலகில், டார்வினை பொய்யாக்கி,
வாழு வாழவிடு என்று புத்தனை வரவேற்போம்.
மனிதன் மனிதனாய் வாழட்டும் அன்று.

பாலைவன சோலையை போல,
இருண்ட பிரபஞ்சத்தில்,
அன்பால் பிரகாசிக்கட்டும் இந்த பூமி...

மற்றவரிடத்தில் அன்பு செய்வோம்,
இளைஞர்கள் நெஞ்சில் தீயை கொள்வோம்.
கொள்கை கொள்வோம், கொள்கைகள் மேல் கர்வம் கொள்வோம்.
தீங்கு செய்யோம், வாழும் தெய்வம் செய்வோம்.
மனிதர்களை நேசித்து ஓர் புது மானிடம் செய்வோம்.

இவ்வுலகில் ஓர் உயிர் இறந்தாலும்,
நம் நெஞ்சில் இறுக்கம் கொள்வோம்.
வாழ்த்து மகிழ்வோம்,
இம்மானுட பிறவியை.

அன்று நான் இல்லையென்றால் என்ன,
என் கனவுகள் நினைவாகி இருக்கும்.
கல்லறையில் இருந்து,
ஒரு கனம் எழுந்து,
பார்த்து, மகிழ்து, மடிவேன் மறுபடியும் நான்...
வாழ்த்து மகிழ்வோம்...
வாழ்வித்து மகிழ்வோம்…
======================================================